Skip to main content

Posts

Showing posts from January, 2012

நடராஜர் பத்து

பாடல் : 1 மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ , மறை நா ‎ ன்கி ‎ ன் அடிமுடியும் நீ , மதியும் நீ , ரவியும் நீ , புனலும் நீ , அனலும் நீ , மண்டலம் இரண்டேழும் நீ , பெண்ணும் நீ , ஆணும் நீ , பல்லுயிர்க்குயிரும் நீ , பிறவும் நீ , ஒருவ ‎ ன் நீயே , பேதாதி பேதம் நீ , பாதாதி கேசம் நீ , பெற்ற தாய் தந்தை நீயே , பொன்னும் நீ , பொருளும் நீ , இ ‏ ருளும் நீ , ஒளியும் நீ , போதிக்க வந்த குரு நீ , புகழொணா கிரகங்கள் ஒ ‎ ன்பதும் நீ , இந்த புவனங்கள் பெற்றவனும் நீ , எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ ‎ ன் குறைகள் யார்க்கு உரைப்பே ‎‎ ன் , ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. ( அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)